நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற பல நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய மருந்தக களஞ்சியசாலையில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த பல மாதங்களாக புற்றுநோயாளிகளுக்கு ஒரு மருந்தின் பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும், இது புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரம்புகளுக்கு வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, இந்த மருந்துகள் மற்றும் சுகாதார அமைப்பில் பல மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் மே மாதத்தில் கிடைத்த அதிகாரப்பூர்வ தரவு அறிக்கைகளின்படி, மத்திய மருந்தக களஞ்சியசாலையில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.