வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து டுவிட் செய்த திரிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வெளியாகி வந்த பேசுபொருளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் டுவிட் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து டுவிட் செய்த திரிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வெளியாகி வந்த பேசுபொருளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் டுவிட் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஜனரஞ்சக திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

அத்துடன், திரிஷா தற்போது நடிகர் விஜய்யுடன், லியோ திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். 

40 வயதை கடந்துள்ள திரிஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில், நடிகை திரிஷாவுக்கு திருமணம் நடக்கப்போவதாக சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.

அதில், "உங்களை பற்றியும் உங்கள் அணியை பற்றியும் உங்களுக்கே தெரியும். அமைதியாக இருங்கள், வதந்திகளை பரப்பாதீர்கள். வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை திரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.