முல்லைத்தீவில் ஐந்து கடைகளையும் கோவிலையும் உடைத்து திருடிய இருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகளையும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால்  நேற்றுமுன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடைகள் மற்றும் ஆலய உண்டிலை  உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக  இடம்பெற்று வருதுள்ளது. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை, மந்துவில்லில் ஒரு கடை, ஆ​டைத் ​தொழிற்சலை அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என  ஐந்து கடைகளும்  புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தில் உண்டியலும்  உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளன. 

இதனையடுத்து,  புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையிலான குழுவினர் குறித்த கைது  நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து  திருடப்பட்ட 46,230 பணமும் , திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  10ஆம் வட்டாரம் (வயது - 14)  மந்துவில்லை சேர்ந்த (வயது -24) இளைஞர் என ​​தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான திருட்டு சம்பவங்கள்  தொடர்ச்சியாக  இடம்பெற்று வருவதனால் மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், புதுக்குடியிருப்பு பொலிஸார் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.