இரண்டு சொகுசு ரக பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன! 

இரண்டு சொகுசு ரக பயணிகள் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இரண்டு சொகுசு ரக பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன! 

இரண்டு சொகுசு ரக பயணிகள் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

குறித்த இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில், நங்கூரமிட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, 366 பயணிகளுடனும், 489 பணி குழாமினருடனும் வாஸ்கொடகாமா என்ற முதலாவது சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

அதேநேரம், எம்.எஸ் மயின் ஷிஃப் 5 என்ற இரண்டாவது சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல், 2365 சுற்றுலா பயணிகளுடனும், 967 அடங்கிய பணி குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.