வடமராட்சி மீனவர் வாடி தீயிட்டு எரிப்பு - பொலிஸில் முறைப்பாடு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மீனவர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மீனவர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை குறித்த மீனவரின் இருப்பிடம் மற்றும் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகளும் தீயீட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் வாடியில் ஏற்பட்ட தீப்பரவலை அவதானித்ததன் பின்னர் அதனை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்பகை காரணமாகவே குறித்த வாடி தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன், அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.