இன்று முதல் அதிகரிக்கும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி குறித்து எச்சரிக்கை!

இன்று முதல் அதிகரிக்கும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி குறித்து எச்சரிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் உள்ளது.