IPL இல் நுழையும் முதல் பழங்குடியின வீரர்!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை ரோபின் மின்ஸ் பெற்றுள்ளார்.

IPL இல் நுழையும் முதல் பழங்குடியின வீரர்!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை ரோபின் மின்ஸ் பெற்றுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான ஏலம் நேற்று (19) டுபாயில் இடம்பெற்றது.

இந்த ஏலத்தில் 21 வயதான ரோபின் மின்ஸிற்கு 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது

இதில் இறுதியாக ரோபின் மின்ஸ் 3.6 கோடி இந்திய ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியினால் வாங்கப்பட்டார்.

அத்துடன், ரோபின் மின்ஸின் தந்தை ராஞ்சி விமான நிலையத்தில் காவலாளியாக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.