குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பில் ஒருவர் கைது!

அளவெட்டியில் குடும்ப பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பில் நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பில் ஒருவர் கைது!

அளவெட்டியில் குடும்ப பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பில் நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி தீக்காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, நானுஓயா - பங்களாவத்தை பகுதியில் வீதியோரத்திலுள்ள விவசாய நிலத்தில் பணிப்புரிந்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

70 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய காணியிலிருந்து பணிபுரிந்துக்கொண்டிருந்த நிலையில் தவறுதலாக தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் தவறி வீழ்ந்தமையினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.