விவசாய தொழில் முயற்சியாளர்களின் உச்சி மாநாடு இன்று!

விவசாய தொழில் முயற்சியாளர்களின் உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளன.

விவசாய தொழில் முயற்சியாளர்களின் உச்சி மாநாடு இன்று!

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி ஆகியன நடைபெறவுள்ளன.

வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள், உள்ளூர் மொத்த வியாபாரிகள் மற்றும் புதிய உற்பத்தியாளர்கள் குழுவினர் இதில் பங்கேற்கவுள்ளனர். 

புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல், கொத்தணி விவசாய நிறுவனங்களை ஸ்தாபித்தல், உயர்தர பொருட்களை சந்தைக்கு விடுவித்தல் என்பன இதன் பிரதான நோக்கமாகும். 

விவசாய அமைச்சின் மேற்பார்வையில் குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.