சந்தையில் கிடைக்கும் பழங்களில் அதிகளவு இரசாயனம்!

சந்தையில் கிடைக்கும் பல வகையான பழங்களில் அதிகளவு இரசாயனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் கிடைக்கும் பழங்களில் அதிகளவு இரசாயனம்!

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமாரவை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், சந்தையில், மா, வாழை மற்றும் பப்பாசி உள்ளிட்டவற்றை கனிய வைப்பதற்காக இந்த இரசாயன திரவியங்கள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். 

இதன் காரணமாக குறித்த பழங்களின் தரம் குறைவடைவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்தார்.