மிருகக்காட்சி சாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு - உரிய விசாரணை நடத்தப்படும்!

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இருந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று உயிரிழந்தமை தொடர்பில், உரிய விசாரணை நடத்தப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிருகக்காட்சி சாலையில்  ஒட்டகச்சிவிங்கி  உயிரிழப்பு - உரிய விசாரணை நடத்தப்படும்!

அந்த மிருகக்காட்சி சாலையில், 2 ஓட்டகச்சிவிங்கிகள் மாத்திரமே இருந்த நிலையில், அவற்றில் ஒன்று நேற்று உயிரிழந்தது.

குறித்த ஒட்டகச்சிவிங்கியின் காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக மயக்க மருந்து வழங்கப்பட்டதன் பின்னர், அது உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. 

 எவ்வாறாயினும், அது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.