இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கோசத்தினால் ஒத்திவைப்பு!

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கோசத்தினால் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கோசத்தினால் ஒத்திவைப்பு!

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கோசத்தினால் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடிய நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோசம் எழுப்பியிருந்தன.

கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில், இன்றும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
அத்துடன், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென 60 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும்  சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை என கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.