மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் அறிவிப்பு!

மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் அறிவிப்பு!

எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபானசாலைகளை மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுபானசாலைகளை 3 நாட்களுக்கு மூடுவது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.