மீண்டும் அமுலாகும் அனுமதிப் பத்திரம் முறை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (PASS) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் அமுலாகும் அனுமதிப் பத்திரம் முறை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள், நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள் என்பன ஏற்படுவதன் காரணமாக நேற்று (19) முதல் பார்வையாளர் அனுமதிப்பத்திரமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 1 நோயாளருக்கு தலா 2 அனுமதிப்பத்திரம் எனும் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.