பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் 2 வாரங்களில் பாடசாலைப் பைகள், அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் காலணிகளின் விலை, மேலும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களில் பாடசாலைப் பைகள், அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் காலணிகளின் விலை, மேலும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியும் என அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள போதிலும், வர்ணப்பூச்சு, இரும்பு போன்ற கட்டுமானத்துறைசார் பொருட்களின் விலையும் இதுவரை குறையவில்லை என தேசிய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.