மெல்பெனில் உள்ள இலங்கை நிதித் திட்டமிடல் அதிகாரி 10 மில்லியன் டொலர் மோசடி!

இலங்கையில் பிறந்த மெல்போர்ன் நிதித் திட்டமிடுபவரான, டெரன்ஸ் ரியோ ரியென்சோ நுகாரா, வாடிக்கையாளர்களின் மேலதிக நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மெல்பெனில் உள்ள இலங்கை நிதித் திட்டமிடல் அதிகாரி 10 மில்லியன் டொலர் மோசடி!

இந்த நிலையில் ஏமாற்றுதல் மற்றும் இரண்டு திருட்டுகள் மூலம் நிதி ஆதாயம் பெற்ற 37 குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது கையாடிய பல மில்லியன் டொலர்களுடன் , அவர் 2019 இல் நாட்டில் இருந்து தப்பிச்சென்றார். 

மெக்ஸிகோ, கொஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இடையே மூன்று ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் 

இந்த நிலையில் மெக்ஸிகோவில், அவர் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் கடத்தப்பட்ட போது, அவுஸ்திரேலிய தூதரகத்தின் உதவியை நாடினார், 

அங்கு தஞ்சம் அடைந்த போதே அவருக்கு அவுஸ்திரேலியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விடயம் தெரிய வந்தது. 

இதனையடுத்து கடந்த அக்டோபரில் மெல்போர்ன் விமான நிலையத்தில், வைத்து காவல்துறையினரால் கைவிலங்கிடப்பட்டார் 

தற்போது ராவன்ஹால் சீர்திருத்த மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட உள்ளது.