கடமைநேர துப்பாக்கியால் உயிரை மாய்த்துக்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி!

எஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவரது கடமைநேர துப்பாக்கியை இயக்கி தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கடமைநேர துப்பாக்கியால் உயிரை மாய்த்துக்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி!

எஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. 

தொடர்ந்தும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.