சீரற்ற காலநிலையால் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் இந்த காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒருவரைக் காணவில்லையெனவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் 1,973 பாதுகாப்பான இடங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகின்றது.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.