யானைகளை தத்தெடுக்க தடை!

யானைகளை தத்தெடுக்க தடை!

அழிவின் விளிம்பில் உள்ள காட்டு யானைகளை காக்கும் விதமாக, அவற்றை தத்தெடுக்க தடை விதித்து பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாசகம் பெறுவது உள்ளிட்ட பல விடயங்களுக்காக யானைகள் துன்புறுத்தப்படுவதாக  நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், யானைகளை வளர்ப்பதற்காக வழங்கப்பட்ட உரிமங்களையும் 
பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.