தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வரவேண்டும் - விஜய்யிடம் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (17) இடம்பெற்றது.

தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வரவேண்டும் - விஜய்யிடம் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (17) இடம்பெற்றது.

இந்த விழாவில் மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். 

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது மாணவி ஒருவர், விஜய்யிடம் சான்றிதழை வாங்கியதன் பின்னர் "தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக நீங்கள் வரவேண்டும். நாங்கள் போடும் முதல் வாக்கை நீங்கள் மதிப்புமிக்கதாக மாற்றி தரவேண்டும். அந்த வாக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். உங்களுடைய ஒவ்வொரு படமும் நல்ல கருத்துகளை சொல்லியிருக்கிறது. ஒரு வாக்கு எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் படத்தில் காண்பித்திருப்பீர்கள் அது எங்களுக்கு ஊக்கமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.