சீதுவை தடுகம் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடுகம் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீதுவை தடுகம் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்  அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடுகம் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீல நிறத்திலான பயணப்பொதியிலிருந்து பொலிஸாரால் நேற்று சடலம் மீட்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னதாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மாராவில் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பலரிடமும் நிதி மோசடி செய்ததாக முறைப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தனது நிரந்தர முகவரியில் வசிக்காமல் அங்கிருந்து தலைமறைவாக பிரிதொரு பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.