களுத்துறையில் கோர விபத்து - 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

தென்னிலங்கை - மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

களுத்துறையில் கோர விபத்து - 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

முச்சக்கரவண்டியை திடீரென தெற்கு பக்கம் திருப்ப முற்பட்ட போது பேரூந்து வீதியை விட்டு விலகி கல்வெட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

 இன்று (08) அதிகாலை விபத்து குறித்த இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாபலாகம பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தின் சாரதி விபத்தை தடுப்பதற்கு முயற்சித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.