அதிகார பரவலாக்கம் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் - கோவிந்தன் கருணாகரம் 

அதிகார பரவலாக்கம் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் - கோவிந்தன் கருணாகரம் 

காவல்துறை அதிகாரம் இல்லாத ஏனைய அதிகார பரவலாக்கம் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்றதாக கூறப்படும் காவல்துறை அடாவடிதனத்தை கண்டித்து மட்டக்களப்பில் நேற்று  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தின் காவல்துறை அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பரவலாக்க தயாராக உள்ளதாக கூறுகிறார்.

ஆயினும், எந்த அதிகாரம் பரவலாக்கப்பட்டாலும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறை அதிகாரம் தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.