ஆடு ஜீவிதம் படத்துக்காக 16 வருடம் காத்திருப்பு இயக்குநர் ப்ளெஸ்ஸி! 

ஆடு ஜீவிதம் படத்துக்காக 16 வருடம் காத்திருப்பு இயக்குநர் ப்ளெஸ்ஸி! 

‘ஆடு ஜீவிதம்’ படத்துக்காக இயக்குநர் ப்ளெஸ்ஸி 16 ஆண்டுகாலம் காத்திருந்தது குறித்து நடிகர் பிருத்விராஜ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனித்துள்ளார்.

 படம் வரும் மார்ச் 28-ம் திகதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படமானது,  நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு” என்று பிருதிவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.