எல்பிடிய விபத்தில் கார் ஒன்று முற்றாக தீக்கிரை - அநுராதபுர விபத்தில் தாயும் மகளும் பலி!

எல்பிடிய பெரிய பாலம் வீதியில் எத்கந்துர குள சுற்றுவட்டத்தில் இன்று அதிகாலை (mercedes _Benz) கார் ஒன்று வீதியை விட்டு

எல்பிடிய  விபத்தில் கார் ஒன்று முற்றாக தீக்கிரை - அநுராதபுர விபத்தில் தாயும் மகளும் பலி!

எல்பிடிய பெரிய பாலம் வீதியில் எத்கந்துர குள சுற்றுவட்டத்தில் இன்று அதிகாலை (mercedes _Benz) கார் ஒன்று வீதியை விட்டு விலகி சென்று வீதி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் முற்றாக தீக்கிரையானது. 

இதேவேளை, அநுராதபுரம் - விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

பாரவூர்தி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் பலியானதாக காவல்துறை தெரிவித்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்து வருகின்றது.