அவிசாவளை துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு l மேலும் இருவர் படுகாயம்.

அவிசாவளை – இஹல தல்துவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு 11.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு l மேலும் இருவர் படுகாயம்.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை – இஹல தல்துவ பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறு பயணித்த நால்வரில் இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவரை இலக்கு வைத்து, இதற்கு முன்னரும் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.