யாழ் வர்த்தகர் கடத்தல்: ஆறு பேர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் பழ வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் ஆறு பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் வர்த்தகர்  கடத்தல்: ஆறு பேர்  பொலிஸாரால் கைது!

இதன்போது, கடத்தலுக்கு பயன்பட்டதாக கூறப்படும் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் வைத்து பழ வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை கடத்தப்பட்டார்.

இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து கிளிநொச்சி பகுதியிலிருந்து குறித்த வர்த்தகர் மீட்கப்பட்டதுடன், கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கனகாம்பிகை குளம், பரந்தன், கரடிப்போக்கு சந்தி பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும், பழக்கடை வர்த்தகருக்கும் இடையில் நிலவிய கடன் கொடுக்கல் வாங்கலினாலே குறித்த சம்பவம் நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.