முல்லைத்தீவு பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைபடம் - விசாரணைக்கு உட்பட்ட இளைஞன்!

முல்லைத்தீவு பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைபடம் -  விசாரணைக்கு உட்பட்ட இளைஞன்!

முல்லைத்தீவு பட்டத்திருவிழாவில் கார்த்திகைப் பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றிய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற முல்லைத்தீவு பட்டத்திருவிழாவின் போது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு வருடமும் பட்டத்திருவிழா நடத்து பவர்களால் முல்லைத்தீவிலும் பட்டத்திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எனினும், இந்த பட்டத்திருவிழாவில் வித்தியாச மான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், திருவிழாவில் முல்லைத் தீவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழீழ வரைபடம் மற்றும் கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார்.

இதனை அவதானித்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்று இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.