சங்கானையில் தீப்பந்தம் ஏந்திய போராட்டம் - அரசின் செயல்களுக்கு எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் - சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சங்கானையில் தீப்பந்தம் ஏந்திய போராட்டம் - அரசின் செயல்களுக்கு எதிர்ப்பு!

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை ஐக்கிய மக்கள் சக்தியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டக்காரர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மின் கட்டணத்தை குறைத்திடு, பொருட்களின் விலைகளை குறைத்திடு என்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.