பலஸ்தீன குழுவினர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை விடுப்பு!

டொனால்ட் ட்ரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும் என பலஸ்தீன குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் - காஸா போர் குறித்து பேசுகையில், ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறியதோடு, காஸாவை கைப்பற்றி அதனை மத்திய கிழக்கின் சுற்றுலாத் தளமாக மாற்றுவோம் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ட்ரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்கொட்லாந்து நாட்டில் அவருக்குச் சொந்தமான கோல்ப் மைதானத்திற்குள் பலஸ்தீன குழுவினர் சிலர் புகுந்து, அங்குள்ள புல்வெளி பகுதியில் 'காசா விற்பனைக்கு இல்லை' என்று பிரமாண்டமாக எழுதி வைத்துள்ளனர்.
மேலும், கோல்ப் மைதானம் முழுவதும் குழிகள் தோண்டப்பட்டு, ட்ரம்ப் காஸாவை தனது சொத்தாக கருத முயற்சித்தால், அவரது சொந்த சொத்து தங்களால் சூறையாடப்படும் என பலஸ்தீன குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்கொட்லாந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.