ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியில் மிக நெடுந்தூரத்தில் உள்ள தீவுகளில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 5.9 ரிச்டர் அளவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் ஆர்ப்பரித்து தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஐஜு தீவுகளில் கடற்கரை வீடுகள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.