அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்த திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்த திட்டம்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலணித் தலைவருமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்  நடைபெற்றது. 

அத்துடன், குறித்த பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டின் போது ஏற்படும் சவால்கள் தொடர்பில் இதன்போது விரிவாக அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலாத்துறை திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்று வருடங்களுக்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதியின் கருத்தறிவதற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக ஒரு மாதத்தில் மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது