சிறிய தந்தையை தலைக்கவசத்தால் தாக்கிக் கொன்ற புதல்வர்கள்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட ஒருவர் நேற்று (25) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய தந்தையை தலைக்கவசத்தால் தாக்கிக் கொன்ற புதல்வர்கள்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட ஒருவர் நேற்று (25) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நபரின் சகோதரரின் புதல்வர்களே மது போதையில் சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை  முடுக்கிவிட்டுள்ளனர்.