சென்னையில் ஆட்கடத்தல், கொலை மற்றும் வெடிப்பொருள் வைத்திருந்த இலங்கையர் கைது.

சென்னை மாநகரப் பகுதிகளில் ஆட்கடத்தல், கொலை மற்றும் வெடிப்பொருள் பதுக்கல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒருவரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஆட்கடத்தல், கொலை  மற்றும் வெடிப்பொருள் வைத்திருந்த இலங்கையர் கைது.

இலங்கையில் தங்கியிருந்ததாக கூறப்படும் அவர், நேற்று சென்னைக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 47வயதான தௌபீக் ஹமீது, 2008 ஆம் ஆண்டு, வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும் வகையில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவராவார்.

தௌஃபீக் ஹமீத் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பிணையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றம் 2021 இல் அவருக்கு எதிராக பிணையில்; வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்தது.

கொடுங்கையூர், எஸ்பிளனேடு, முத்தியால்பேட்டை, மீஞ்சூர், திருச்சி, அதிராம்பட்டினம், உத்தமநல்லூர் ஆகிய பொலிஸ் நிலையங்களிலும், கேரளா, மும்பை போன்ற பொலிஸ் நிலையங்களிலும், கொலை, வெடிபொருள் வைத்திருந்தமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 14 குற்றவியல் முறைப்பாடுகள் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சென்னை பொலிஸார் லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டு விமான நிலையங்களுக்கு அறிவித்திருந்தனர்.

இந்தநிலையிலேயே அவர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.