2023 - றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்த தென்னாபிரிக்கா!

2023ஆம் ஆண்டு றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதிப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (29) அதிகாலை இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் போட்டியிட்டன.

போட்டியில் தென்னாபிரிக்கா அணி 12க்கு 11 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

அத்துடன், தென்னாபிரிக்கா அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.