யாழ் - பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ் - பருத்தித்துறையில்  மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் மாணவர்கள் இருவர் மீது நேற்று மாலை (21) வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் வீதியில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலரினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 2 மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இந்தநிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.