நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி இயங்க ஆரம்பித்தது! 

திருத்தப்பணிகளால் செயலிழந்த நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி இன்று இயங்க ஆரம்பித்த நிலையில், தேசிய மின்சார விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி இயங்க ஆரம்பித்தது! 

திருத்தப்பணிகளால் செயலிழந்த நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி இன்று இயங்க ஆரம்பித்த நிலையில், தேசிய மின்சார விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக, 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்கப்பெறும் என நிலையத்தின் ஊடக பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தொழிநுட்ப பிரச்சினை காரணமாக செயலிழந்த நுரைச்சோலை மின் நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.