அனைத்து வாகன சாரதிகளுக்கும் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!
![அனைத்து வாகன சாரதிகளுக்கும் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!](https://tamilvisions.com/uploads/images/202406/image_870x_6663fe4e9baed.jpg)
அனைத்து சாரதிகளுக்கும் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அனைவரும் தங்களது வாகனங்களின் உரிமங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதிகள் அனைவரும் வீதிகளில் பயணிப்பதற்கு முன்னர் தங்களது வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் , வாகன காப்பீடு , வாகன வருமான அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கனரக வாகனங்களில் பயணிக்கும் சாரதிகள் அனைவரும் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை எடுத்துச் செல்லுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.