மேர்வின் சில்வாவை கைது செய்ய வலியுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் சில வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு வலியுறுத்தியுள்ளன.

 மேர்வின் சில்வாவை கைது செய்ய வலியுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் சில வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு வலியுறுத்தியுள்ளன.

தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக இனவாத மற்றும் வன்முறையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

இதன் காரணமாக தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கு முன்னாள் அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.