நடிகர் விஜய் மீது செருப்பை வீசி தாக்குதல் - காவல்துறையில் முறைப்பாடு!

நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகர் விஜய் மீது செருப்பை வீசி தாக்குதல் - காவல்துறையில் முறைப்பாடு!

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில், விஜயகாந்தின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்தார். 

அப்போது கண்கலங்கியபடி விஜயகாந்தின் உடலத்துக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்திவிட்டு புறப்படும் பொழுது, மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசி விஜய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், விஜய்யை வெளியேறச் சொல்லி எதிர்ப்புகளும் அங்கு கிளம்பியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், நடிகர் விஜய் மீது செருப்பை வீசிய சம்பவம் தொடர்பில் தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.