யாழில் பல காலமாக கைத்தொலைபேசிகளை திருடியவர் சிக்கினார்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருடும் கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் பல காலமாக கைத்தொலைபேசிகளை திருடியவர் சிக்கினார்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருடும் கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து  திருடப்பட்ட9 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

திருடிய  கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்த நால்வரும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் 

காரைநகர் மானிப்பாய் வீதியில் பேருந்துகளில் பயணம் செய்யும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்களின் தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமான முறையில் திருடி வந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்  மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்  யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசி தொலைத்தவர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் உரிய முறைப்பாடுகளை காண்பித்து தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.