இலங்கையின் பல பகுதிகளில் மழைப் பெய்யும் சாத்தியம்!

இலங்கையின் பல பகுதிகளில் மழைப் பெய்யும் சாத்தியம்!

இலங்கையின் பல பகுதிகளில் நாளைய தினம் மழைப் பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, சபரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா, மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.