தலைக்கவசம் அணிந்த சிலரால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளியின் வீடு!

இரத்தினபுரி - கஹவத்தை பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் மண் குடில் ஒன்று உடைத்து முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிந்த சிலரால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்ட  பெருந்தோட்ட தொழிலாளியின்  வீடு!

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கஹவத்தை பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவர் தனக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக பிரிதொரு குடிலை அமைத்து வசிப்பதற்கு முயற்சித்துள்ளார்.

குறித்த தொழிலாளரின் குறித்த செயற்பாட்டுக்கு தோட்ட நிர்வாகம் தன்னுடைய முழுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் குறித்த குடிலை அகற்றுவதற்கு முற்றிலும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தலைக்கவசம் அணிந்தவாறு தங்களை ஓய்வுபெற்ற விசேட அதிரடிப்படையினர் என அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் குறித்த தொழிலாளியின் வீட்டினை முழுமையாக அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.