நீதிபதிக்காக மனித சங்கிலி போராட்டம் - ஆதரவு கோரி துண்டுப்பிரசுரம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளியிடும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நீதிபதிக்காக மனித சங்கிலி போராட்டம் - ஆதரவு கோரி துண்டுப்பிரசுரம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளியிடும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

நாளை (04) காலை 9 மணிக்கு  யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன அழைப்பு விடுத்துள்ளன.

இதனிடையே, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும்  இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வழக்கு விசாரணைகள்  இடம்பெறவில்லை. வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.