24 மணிநேரத்தில் 729 பேர் கைது - தேடப்படும் பட்டியலும் களத்தில்!

24 மணிநேரத்தில் 729 பேர் கைது - தேடப்படும் பட்டியலும் களத்தில்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 729 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 499 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 230 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் 3 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதுடன், 4 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் காவல்துறை விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் போது, சுமார் 2 கிலோகிராமுக்கும் அதிக நிறைவுடைய ஹெரோயின், ஐஸ், கேரள கஞ்சா மற்றும் ஹேஷ் உள்ளிட்ட  மேலும் பல போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.