இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இலங்கையில்  இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாயினால் (புதிய விலை 361 ரூபாய்) அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாயினால் (புதிய விலை 417 ரூபாய்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் (புதிய விலை 341ரூபாய்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாயினால் (புதிய விலை 359 ரூபாய்)  அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலையில் 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.