போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர்கள்!

சம்பள அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர்கள்!

சம்பள அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம், தேசிய சேவையாளர் சங்கம் மற்றும் ஐக்கிய சேவையாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கட்டுநாயக்க விமான நிலைய சேவையாளர்களது சம்பளம் அதிகரிக்கப்படும்.

எனினும், 2018 முதல் இதுவரை தங்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக விமான நிலையத்தின் நாளாந்த பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.