மம்தா பானர்ஜி சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

மம்தா பானர்ஜி சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

அவர் தமது வீட்டில் வீழ்ந்த நிலையில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மம்தா பானர்ஜி, தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்தநிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய மத்திய அரசாங்கத்தினால், அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.