நொயல் பிரியந்தவின் கருத்து உண்மைக்கு புறம்பானது - ஜீவன் தொண்டமான்

நொயல் பிரியந்தவின் கருத்து உண்மைக்கு புறம்பானது - ஜீவன் தொண்டமான்

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த வெளியிட்ட கருத்தை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது உண்மைக்கு புறம்பானதாகும்.

ஆகையால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தாம் எதிர்ப்பார்ப்பதாக, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துகள் மற்றும் உணர்வுகளுக்கு தாம் மதிப்பளிக்கும் அதேநேரம், அதனுடன் தாமும் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த வெளியிட்ட கருத்துக்கள் அரசாங்கம் மற்றும் இலங்கை மின்சார சபையின் நிலைப்பாடல்ல.

அத்துடன் தாம் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்திற்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பையும் கோரியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் தமக்கு அறியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில், இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.