மலையகம் 200 நிகழ்வுக்கு வடக்கு மக்களின் ஆதரவும் நடைபவனியும்! (காணொளி)

மலையகத் தமிழ் மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூரும் மலையக சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடைபவணி நிகழ்வுக்கு "யாழ்ப்பாண மக்களின் பங்குபற்றுதலும், ஆதரவு தெரிவித்தலும்" தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

யாழ் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்று முன்தினம் (20) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மலையக மக்களின் பிரதிநிதியாக சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி பா.கௌதமன் கலந்து கொண்டார்.